< Back
மாநில செய்திகள்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்
அம்மன் கோவில் தீமிதி திருவிழா
|26 July 2022 8:32 AM GMT
அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஆத்தூர் சிவசக்தி அம்மன் கோவில் தீ மிதி விழா நடந்தது.
செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள ஆத்தூர் சிவசக்தி அம்மன் கோவில் தீ மிதி விழா 4 நாட்கள் நடந்தது. முதல் 2 நாட்கள் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனைகளும், அம்மன் சக்தி கரக வீதி உலாவும் நடந்தன. 3-ம் நாள் காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு வழிபாடுகளும் நடந்தன. தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அலகுகுத்தியும் நேர்த்தி கடன் செலுத்தினர். பிற்பகல் அன்னதானமும், கூழ் வார்த்தலும் நடந்தது. மாலை கோவில் வளாகத்தில் தீமிதி பெருவிழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்தனர். இரவு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலாவும் நடந்தன. 4-ம் நாள் காலை ஏராளமான பக்தர்கள் ஊரணி பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர்.