
விழுப்புரம்
முடக்கி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படியை வழங்க வேண்டும்

முடக்கி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படியை வழங்க வேண்டும் என்று அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
விழுப்புரம்:
தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் விழுப்புரம் மாவட்ட 4-வது மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் பொன்முடி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் குமாரதாஸ் முன்னிலை வகித்தார். துணைத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். சி.ஐ.டி.யு. போக்குவரத்துத்துறை மாநில பொதுச்செயலாளர் மூர்த்தி தொடக்க உரையாற்றினார். மாவட்ட செயலாளர் அய்யாக்கண்ணு வேலை அறிக்கையையும், மாவட்ட பொருளாளர் ரத்தினம் வரவு, செலவு அறிக்கையையும் சமர்பித்தனர். மாநில செயலாளர் ஆறுமுகம் நிறைவுரையாற்றினார்.
மாநாட்டில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், முடக்கி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படியை வழங்க வேண்டும், மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் இருந்து அனைத்து வகையான நோய்களுக்கும் மருத்துவம் பார்க்க வேண்டும், குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.1 லட்சம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாவட்ட இணை செயலாளர் லோகநாதன், கண்டாச்சிபுரம் வட்ட நிர்வாகிகள் ஆறுமுகம், பூங்கான், ராமச்சந்திரன், ராஜமாணிக்கம், முருகேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் விழுப்புரம் வட்ட செயலாளர் ராஜரத்தினம் நன்றி கூறினார்.