< Back
மாநில செய்திகள்
தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

தினத்தந்தி
|
22 Sep 2022 10:41 AM GMT

தமிழகம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்கி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் சென்னை, விழுப்புரம், ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட ஒன்பது இடங்களில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழகம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி கோரிய வழக்கில் தமிழக அரசு, காவல்துறை பதிலளிக்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மேலும் அணிவகுப்புக்கு நிபந்தனைகள் குறித்து விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு செப்.28-ஆம் தேதிக்குள் தமிழ்நாடு காவல்துறை அனுமதி வழங்க வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மேலும் செய்திகள்