< Back
மாநில செய்திகள்
விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
28 March 2023 5:07 PM GMT

அனந்தபுரம் ஊராட்சியில் விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

கண்ணமங்கலம்

கண்ணமங்கலம் அருகே அனந்தபுரம் ஊராட்சியில் புதூர் மாரியம்மன் கோவில் அருகே இன்று அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் 100 நாள் தொழிலாளர்களுக்கு தடையின்றி பணி வழங்க கோரியும், பணித்தள பொறுப்பாளர்களை மாற்றக்கோரியும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

போளூர் தாலுகா விவசாயிகள் சங்க தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். கிளை தலைவர் நதியா, செயலாளர் பச்சியம்மாள், பொருளாளர் சுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, போளூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பாபு, ஊராட்சி தலைவர் வளர்மதி, கிராம நிர்வாக அலுவலர் மயிலரசன், சந்தவாசல் வருவாய் ஆய்வாளர் சுரேஷ் ஆகியோர் விரைந்து வந்து ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது ஊராட்சி மன்ற தலைவர் வளர்மதி, விரைவில் பணித்தளப்பொறுப்பாளர்கள் மாற்றம் செய்யப்படுவர், வருகிற 30-ந் தேதி ஊராட்சியில் உள்ள 650 நூறு நாள் திட்ட பணியாளர்களுக்கு பணி வழங்கவும் ஒப்புதல் கடிதம் வழங்கினார்.

அதன்பேரில் அவர்கள் ஆர்ப்பாட்டத்தை முடித்துக்கொண்டனர்.

மேலும் செய்திகள்