< Back
மாநில செய்திகள்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்
உழவு பயிற்சியில் ஈடுபட்ட வேளாண் கல்லூரி மாணவிகள்
|3 March 2023 8:16 PM GMT
உழவு பயிற்சியில் ஈடுபட்ட வேளாண் கல்லூரி மாணவிகள்
தஞ்சை மாவட்டம் உசிலம்பட்டி ஆர்.வி.எஸ். வேளாண்மை கல்லூரியில் இளம் அறிவியல் வேளாண்மை பிரிவில் 4-ம் ஆண்டு பயிலும் மாணவிகள் ஊரக வேளாண் பணி அனுபவ திட்டத்திற்காக பல்வேறு கிராமங்களில் தங்கி களப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பயிற்சியின் போது, விவசாயிகளுக்கு தேவையான தொழில் நுட்பங்களை கற்றுக்கொடுத்தும் வருகின்றனர். வேளாண்மை கல்லூரி மாணவிகள் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை அடுத்துள்ள கண்ணந்தங்குடி மேலையூர் விவசாயி மூர்த்தி என்பவருடன் டிராக்டர் மூலம் வயலில் இறங்கி உழவு பயிற்சியில் ஈடுபட்டனர். வேளாண் கல்லூரி மாணவிகள் வயலில் இறங்கி டிராக்டர் மூலம் உழவு பயிற்சி பெற்றதை அந்த பகுதி விவசாயிகள் ஆர்வத்துடன் பார்த்தனர்.