< Back
மாநில செய்திகள்

திருவாரூர்
மாநில செய்திகள்
அரசு போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

19 April 2023 1:00 AM IST
அரசு போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒப்பந்த அடிப்படையில் ஆள் எடுப்பதை கைவிட வேண்டும். 8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக மாற்றும் தொழிலாளர் சட்ட மசோதாவை திரும்பப்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சோமசுந்தரம் தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் செங்குட்டுவன், சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் முருகையன், மாவட்ட தலைவர் அனிபா, மாவட்ட பொருளாளர் மாலதி, மாவட்ட துணைத்தலைவர் அம்பேத்கர், பொருளாளர் பால முரளி உள்பட பலர் கலந்து கொண்டனர்.