< Back
மாநில செய்திகள்
அக்னிபத் திட்டத்தை ரத்து செய்யக்கோரி   காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
திருவாரூர்
மாநில செய்திகள்

அக்னிபத் திட்டத்தை ரத்து செய்யக்கோரி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
26 Jun 2022 4:16 PM GMT

அக்னிபத் திட்டத்தை ரத்து செய்யக்கோரி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசின் அக்னிபத் திட்டத்தை ரத்து செய்யக்கோரி மன்னார்குடி அருகே பரவாக்கோட்டையில் கிராம காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு திருவாரூர் காங்கிஸ் கமிட்டி தலைவர் துரைவேலன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட பொதுச்செயலாளர் வீரமணி, வட்டார தலைவர் செல்வராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் குணசேகரன், பரவாக்கோட்டை காங்கிரஸ் கமிட்டி தலைவர் சஞ்சய், வட்டார விவசாய அணி தலைவர் கலியபெருமாள் மற்றும் பலர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

மேலும் செய்திகள்