< Back
மாநில செய்திகள்
அகத்தீஸ்வரர் கோவில் தேரோட்டம்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

அகத்தீஸ்வரர் கோவில் தேரோட்டம்

தினத்தந்தி
|
3 April 2023 6:45 PM GMT

திருக்கோவிலூர் அருகே அகத்தீஸ்வரர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் அருகே கூவனூர் கிராமத்தில் கற்பூராம்பாள் சமேத அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ விழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினந்தோறும் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வெவ்வேறு வாகனத்தில் சாமி வீதிஉலாவும் நடைபெற்று வந்தது. மேலும் திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று தேர்திருவிழா நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், தேன் உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து அலங்கரிக்கப்பட்ட தேரில் சிறப்பு அலங்காரத்தில் அகத்தீஸ்வரர் எழுந்தருளினார். அப்போது அங்கிருந்த பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று வந்தது. இதில் திருக்கோவிலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் இன்று (செவ்வாய்க்கிழமை)தென்பண்ணையாற்றில் சாமிக்கு தீர்த்தவாரி உற்சவமும், நாளை (புதன்கிழமை) இரவு சண்டிகேஸ்வரர் வீதி உலாவும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், விழா குழுவினர்கள் மற்றும் உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்