< Back
மாநில செய்திகள்
7 நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்ற நாகை மீனவர்கள்
மாநில செய்திகள்

7 நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்ற நாகை மீனவர்கள்

தினத்தந்தி
|
11 Dec 2022 1:04 PM GMT

இன்று அதிகாலை நாகப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 700 விசைப்படகுகள் 3 ஆயரம் பைபர் படகுகள் மீன்பிடிக்க சென்றனர்.

நாகப்பட்டினம்,

வங்கக்கடலில் ஏற்பட்ட மாண்டஸ் புயல் கரையை கடந்ததை தொடர்ந்து ஒரு வாரத்திற்கு பிறகு ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு சென்ற நாகை மீனவர்கள் தென்கிழக்கு வங்கக் கடலில் ஏற்பட்ட மாண்டஸ் புயல் காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லக்கூடாது என மீன்வளத்துறை மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதனால் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள 25 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. மேலும் மாண்டஸ் புயல் கரையை கடந்ததைத் தொடர்ந்து நாகப்பட்டினம் துறைமுகத்தில் ஏற்பட்ட 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நேற்று இறக்கப்பட்டது.

மேலும் கடல் சீற்றம் குறைந்த நிலையில் ஒரு வாரத்திற்கு பிறகு மீன் பிடிக்க மீன்வளத்துறையினர் அனுமதித்துள்ளனர். மேலும் மீன்வளத்துறை மூலம் படகுகளுக்கு வழங்கப்படும் டோக்கன்கள் வழங்கப்பட்டு இன்று அதிகாலை நாகப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 700 விசைப்படகுகள் 3 ஆயரம் பைபர் படகுகள் மீன்பிடிக்க சென்றனர்.

ஒரு வாரத்திற்கு பிறகு மீன்பிடிக்கச் செல்லும் அக்கரைப்பேட்டை, நாகூர் பட்டினச்சேரி, நம்பியார் நகர், செருதூர், காமேஷ்வரம் விழுந்தமாவடி, ஆறுக்காட்டுதுறை, கோடியக்கரை உள்ளிட்ட மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் அதிக அளவில் மீன் கிடைக்கும் என மகிழ்ச்சியில் சென்றுள்ளனர்.

மேலும் செய்திகள்