< Back
மாநில செய்திகள்
தேனியில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு
தேனி
மாநில செய்திகள்

தேனியில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு

தினத்தந்தி
|
6 Feb 2023 7:30 PM GMT

தேனியில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி அருகே கோடாங்கிபட்டியை சேர்ந்த வக்கீல் அழகுராஜா தாக்கப்பட்ட சம்பவத்தில், அவரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி தேனி மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டில் வக்கீல்கள் நேற்று கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர். பின்னர் கோர்ட்டு முன்பு வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தேனி வக்கீல்கள் சங்க செயலாளர் முத்துராமலிங்கம் தலைமை தாங்கினார். தலைவர் செல்வன் மற்றும் வக்கீல்கள் பலர் கலந்துகொண்டு, வக்கீல் மீதான தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும், சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யக்கோரியும் கோஷங்கள் எழுப்பினர்.

மேலும் செய்திகள்