< Back
மாநில செய்திகள்
விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
நீலகிரி
மாநில செய்திகள்

விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

தினத்தந்தி
|
25 Jun 2022 2:13 PM GMT

ஊட்டி அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.

ஊட்டி,

ஊட்டி அருகே அதிகரட்டி முட்டிநாடு பகுதியை சேர்ந்தவர் ஹரிகரன் (வயது 23). இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் அவர் வீட்டில் விஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் ஹரிகரனை மீட்டு சிகிச்சைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி ஹரிகரன் பரிதாபமாக உயிரிழந்தார். அவர் எதற்காக விஷம் குடித்து தற்கொலை செய்தார் என்பது தெரியவில்லை. இதுகுறித்து லவ்டேல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்