< Back
மாநில செய்திகள்
நேரடி பட்டயப் பயிற்சிக்கு மாணவர்கள் சேர்க்கை
மயிலாடுதுறை
மாநில செய்திகள்

நேரடி பட்டயப் பயிற்சிக்கு மாணவர்கள் சேர்க்கை

தினத்தந்தி
|
18 Sep 2023 6:45 PM GMT

கூட்டுறவு மேலாண்மை நேரடி பட்டயப்பயிற்சிக்கு மாணவர்கள் சேர்க்கைக்கு வருகிற 22-ந் தேதி கடைசி நாள்.

மயிலாடுதுறை கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர் தயாள விநாயகன் அமுல்ராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருவாரூர் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில் 2023- 2024-ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் www.tncuicm.com என்ற இணையதள முகவரி மூலம் மட்டுமே செப்டம்பர் 13-ந் தேதி முதல் பெறப்படுகிறது. இந்த படிப்பில் சேர விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் வரும் செப்டம்பர் 22- ந் தேதி ஆகும். குறைந்தபட்சம் பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்கள், 2023 ஆகஸ்டு 1-ந் தேதி அன்று 17 வயது பூர்த்தியடைந்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்கள் ஆவர். முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியின் காலம் ஓராண்டு ஆகும். மேலும், விபரங்களுக்கு இணையதளத்தில் அல்லது மேலாண்மை நிலைய முதல்வரின் 94866-05009 கைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். எனவே மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்