< Back
மாநில செய்திகள்
அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு வலுப்பதால் ஈரோடு ரெயில் நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு
ஈரோடு
மாநில செய்திகள்

அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு வலுப்பதால் ஈரோடு ரெயில் நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு

தினத்தந்தி
|
20 Jun 2022 9:20 PM GMT

அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு வலுப்பதால் ஈரோடு ரெயில் நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஈரோடு:

மத்திய அரசு நாட்டில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் அக்னிபத் திட்டத்தை அறிவித்துள்ளது. இதில் 23 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் ராணுவத்தில் 4 ஆண்டுகள் தற்காலிகமாக வேலை பார்க்க வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்திற்கு வட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் அக்னிபத் திட்டத்துக்கு அரசியல் கட்சியினர், அமைப்புகள் ஜனநாயக ரீதியாக போராடி வருகின்றனர்.

மேலும் ரெயில் மறியலுக்காக ஈரோடு ரெயில் நிலையத்துக்குள் யாரும் செல்ல முடியாதபடி கடந்த 18-ந்தேதி முதல் ரெயில்வே பாதுகாப்பு படை, ரெயில்வே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், அக்னிபத் திட்டத்திற்கு வடமாநிலங்களில் போராட்டம் வலுத்து வருவதால், ஈரோடு ரெயில் நிலையத்தில், மாவட்ட போலீசாரும் பாதுகாப்பு பணிக்கு நேற்று அதிகாலை முதல் குவிக்கப்பட்டு உள்ளனர். ரெயில்வே போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படை, தமிழ்நாடு சிறப்பு போலீசார், ஆயுதப்படை போலீசார், லோக்கல் போலீசார், வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்பு பிரிவை சேர்ந்த போலீசார் என 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, தீவிர ரோந்து மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ரெயில் நிலையத்தில் ரெயில் ஏற வரும் பயணிகளின் உடைமைகளை மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் போலீசார் சோதனையிட்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்