மதுரை
மீனாட்சி அம்மன் கோவிலில் நடிகர் பார்த்திபன் சாமி தரிசனம்
|மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடிகர் பார்த்திபன் சாமி தரிசனம் செய்தார்.
நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் நடித்த இரவின் நிழல் திரைப்படம் கடந்த வாரம் தமிழகம் முழுவதும் வெளியாகியது. இந்த திரைப்படம் வெற்றி பெற வேண்டி மீனாட்சி அம்மன் கோவிலுக்கு நேற்று காலை பார்த்திபன், நடிகை பிரிகிடாவுடன் வந்திருந்தார். அவரை பட்டர்கள் கோவிலுக்குள் அழைத்து சென்றனர். அங்கு மீனாட்சி, சுந்தரேசுவரர் சன்னதிகளில் படம் வெற்றி பெற அவர் அர்ச்சனை செய்து சுவாமியை வேண்டி கொண்டார்.
பின்னர் கோவிலில் இருந்து வெளியே வந்த பார்த்திபன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ் சினிமாவிற்கு சம்பந்தமில்லாத புது விதமான முயற்சியில் இரவின் நிழல் படத்தை சிங்கிள் சாட் அடிப்படையில் எடுத்து உள்ளேன். அதில் எனக்கு வியாபார நோக்கம் இல்லை. இரவின் நிழல் படத்தை வெற்றி படமாக்கிய அனைவருக்கும் நன்றி. மேலும் வசூல் ரீதியாக மேலும் மிகப்பெரிய வெற்றி அடைய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.