< Back
மாநில செய்திகள்
விபத்தில் வாலிபர் பலி
திருப்பூர்
மாநில செய்திகள்

விபத்தில் வாலிபர் பலி

தினத்தந்தி
|
27 May 2023 1:34 PM GMT

விபத்தில் வாலிபர் பலி

தளி

கோவை மாவட்டம் சோமனூரைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 35). இவர் அவினாசியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று முன்தினம் மைவாடியில் உள்ள அவருடைய நண்பரை பார்ப்பதற்காக தாராபுரம் சாலை வழியாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அவரது மோட்டார்சைக்கிள் சித்த குட்டை அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் சரவணனை மீட்டு சிகிச்சைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து உடுமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Related Tags :
மேலும் செய்திகள்