< Back
மாநில செய்திகள்
புளியமரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் சாவு
திருவாரூர்
மாநில செய்திகள்

புளியமரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் சாவு

தினத்தந்தி
|
17 Jan 2023 7:15 PM GMT

புளியமரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் இறந்தார்.

மன்னார்குடி அருகே உள்ள சேரன்குளம் நெம்மேலி அண்ணாநகர் தெருவை சேர்ந்த பக்கிரிசாமி மகன் கணேசன் (வயது35). இவர் நேற்று முன்தினம் மன்னார்குடியில் இருந்து கும்பகோணம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். காளாஞ்சிமேடு பகுதியில் சென்றபோது எதிர்பாராதவிதமாக புளியமரத்தில் மோட்டார் சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த கணேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவலறிந்த நீடாமங்கலம் போலீஸ் இந்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக நீடாமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்