< Back
மாநில செய்திகள்
தர்மபுரி அருகே கார் மோதி பட்டுக்கூடு வியாபாரி பலி
தர்மபுரி
மாநில செய்திகள்

தர்மபுரி அருகே கார் மோதி பட்டுக்கூடு வியாபாரி பலி

தினத்தந்தி
|
13 Jun 2023 7:00 PM GMT

தர்மபுரி காமாட்சி தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது 52). பட்டுக்கூடு வியாபாரி. இவர் நேற்று முன்தினம் தர்மபுரியில் இருந்து திருப்பத்தூர் செல்லும் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

சீராம்பட்டி பகுதியில் சென்றபோது எதிரே வந்த ஒரு கார் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சரவணன் படுகாயம் அடைந்தார். இதை பார்த்து அந்த பகுதியில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவரை மீட்டு ஆம்புலன்சு மூலம் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சரவணன் உயிரிழந்தார். இதுதொடர்பாக கிருஷ்ணாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்