< Back
மாநில செய்திகள்
மகேந்திரமங்கலம் அருகேஸ்கூட்டர் மீது வாகனம் மோதி பெண் பலிகணவர் படுகாயம்
தர்மபுரி
மாநில செய்திகள்

மகேந்திரமங்கலம் அருகேஸ்கூட்டர் மீது வாகனம் மோதி பெண் பலிகணவர் படுகாயம்

தினத்தந்தி
|
15 April 2023 7:00 PM GMT

பாலக்கோடு:

மகேந்திரமங்கலம் அருகே ஸ்கூட்டர் மீது வாகனம் மோதி பெண் பலியானார். அவருடைய கணவர் படுகாயம் அடைந்தார்.

பெண் சாவு

தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அடுத்த கூலிகானூர் கிராமத்தை சேர்ந்தவர் முனிராஜ் (வயது 50).விவசாயி.

இவருடைய மனைவி மல்லம்மாள் (45). முனிராஜ் மொபட்டில் நேற்று முன்தினம் மாலை தனது மனைவியுடன் பாலக்கோடு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தனர்.

அப்போது மகேந்திரமங்கலம் அருகே பெரியதப்பை பிரிவு சாலையில் சென்றபோது ராயக்கோட்டை நோக்கி பின்னால் வந்த வாகனம் மொபட் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயம் அடைந்த மல்லம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். முனிராஜ் பலத்த காயமடைந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

விசாரணை

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற மகேந்திரமங்கலம் போலீசார் மல்லம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்