< Back
மாநில செய்திகள்
பரமத்திவேலூர் அருகேடவுன் பஸ் மீது மாட்டு வண்டி மோதி விபத்து
நாமக்கல்
மாநில செய்திகள்

பரமத்திவேலூர் அருகேடவுன் பஸ் மீது மாட்டு வண்டி மோதி விபத்து

தினத்தந்தி
|
13 Feb 2023 7:00 PM GMT

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூரில் இருந்து மோகனூருக்கு அரசு டவுன் பஸ் ஒன்று 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்றது. அப்போது மோகனூரில் இருந்து பரமத்திவேலூர் நோக்கி சரக்கு ஆட்டோ ஒன்றின் பின்பகுதியில் மாட்டு வண்டியை பின்னால் கட்டி இழுத்து வந்து கொண்டிருந்தனர். அப்போது சரக்கு ஆட்டோவில் கட்டப்பட்டிருந்த கயிறு எதிர்பாராதவிதமாக அறுந்தது. இதனால் சாலையில் தறிகெட்டு ஓடிய மாட்டு வண்டி டவுன் பஸ்சின் முன்பகுதி கண்ணாடியில் மோதியது. இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது. டிரைவர் சுதாரித்து கொண்டு பிரேக் போட்டு பஸ்சை நிறுத்தினார். இதனால் பஸ்சில் பயணம் செய்த அனைவரும் அதிர்ஷ்டவசமாக எந்தவித காயமும் இன்றி உயிர்தப்பினர்.

இதனையடுத்து பயணிகள் அனைவரும் கீழே இறக்கி விடப்பட்டு மாற்று பஸ்சில் மோகனூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து பரமத்திவேலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்