< Back
மாநில செய்திகள்
கந்தம்பாளையம் அருகே  விபத்தில் முதியவர் சாவு
நாமக்கல்
மாநில செய்திகள்

கந்தம்பாளையம் அருகே விபத்தில் முதியவர் சாவு

தினத்தந்தி
|
16 Dec 2022 6:45 PM GMT

கந்தம்பாளையம்:

கந்தம்பாளையம் அருகே உள்ள கொண்டரசம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 32). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு தொட்டியம் தோட்டம் என்ற பகுதியில் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது கந்தம்பாளையம் அருகே உள்ள நடந்தை பெரிய சூரம்பாளையத்தை சேர்ந்த தாமரைச்செல்வன் (70) என்பவர் மொபட்டில் வந்தார்.

அந்தசமயம் மொபட் எதிர்பாராதவிதமாக நடந்து சென்ற பரமசிவத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் பரமசிவத்திற்கு லேசான காயமும், தாமரைச்செல்வனுக்கு தலையில் பலத்த காயமும் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் மீட்டு பரமசிவத்தை திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கும், தாமரைச்செல்வனை சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கும் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தாமரைச்செல்வன் நேற்று இறந்தார். இந்த விபத்து குறித்து நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்