< Back
மாநில செய்திகள்
கந்தம்பாளையம் அருகே  விபத்தில் திருநங்கை உள்பட 2 பேர் படுகாயம்
நாமக்கல்
மாநில செய்திகள்

கந்தம்பாளையம் அருகே விபத்தில் திருநங்கை உள்பட 2 பேர் படுகாயம்

தினத்தந்தி
|
6 Oct 2022 6:45 PM GMT

கந்தம்பாளையம் அருகே விபத்தில் திருநங்கை உள்பட 2 பேர் படுகாயம்

கந்தம்பாளையம்:

கந்தம்பாளையம் அருகே உள்ள முசல்நாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 62). கூலித்தொழிலாளி. இவர் சம்பவத்தன்று அங்குள்ள பேக்கரியில் டீ குடித்து விட்டு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே மொபட்டில் பெரியமணலியை சேர்ந்த திருநங்கை ரோஷினி (27) வேகமாக வந்து நடந்து சென்ற தங்கவேல் மீது மோதினார். இதில் 2 பேரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். அக்கம் பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு தங்கவேலை சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கும், ரோஷினியை நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்