< Back
மாநில செய்திகள்
அறங்காவலர் குழு தலைவராக ராம்கோ சேர்மன் பதவி ஏற்பு
விருதுநகர்
மாநில செய்திகள்

அறங்காவலர் குழு தலைவராக ராம்கோ சேர்மன் பதவி ஏற்பு

தினத்தந்தி
|
19 Sept 2023 1:06 AM IST

அறங்காவலர் குழு தலைவராக ராம்கோ சேர்மன் பதவி ஏற்றுக்கொண்டார்.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவில் உள்ளது. இந்த கோவிலின் புதிய அறங்காவலர்களாக ராம்கோ சேர்மன் வெங்கட்ராமராஜா, ராம்குமார் வரதராஜன், உமாராணி, நளாயினி, மனோகரன் ஆகியோரை தேர்வு செய்து தமிழக அரசின் அறநிலையத்துறை அறிவித்தது. அதன் பிறகு அறங்காவலர்கள் குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் அறங்காவலர் குழு தலைவராக ராம்கோ சேர்மன் வெங்கட்ராமராஜா தேர்வு செய்யப்பட்டு பதவி ஏற்றார். பதவி ஏற்பு விழா நிகழ்ச்சியில் இந்து அறநிலையத்துறை இணை ஆணையாளர் செல்லத்துரை, உதவி ஆணையாளர் வளர்மதி, நிர்வாக அதிகாரி முத்துராஜா, ஆய்வாளர் முத்து மணிகண்டன், இளைஞர் அணியை சேர்ந்த ஆர்.வி.கே. துரை, அ.ம.மு.க. மாவட்ட செயலாளர் காளிமுத்து, நகர் மன்ற சேர்மன் தங்கம் ரவி கண்ணன், துணை சேர்மன் செல்வமணி, மாவட்ட அரசு வக்கீல் திருமலையப்பன், வத்திராயிருப்பு யூனியன் சேர்மன் சிந்து முருகன், ஒன்றிய செயலாளர்கள் ஆறுமுகம், முனியாண்டி, மம்சாபுரம், உதயசூரியன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். புதிய அறங்காவலர் குழுவினருக்கு முக்கிய பிரமுகர்கள் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர்.


மேலும் செய்திகள்