< Back
மாநில செய்திகள்
நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது
திருநெல்வேலி
மாநில செய்திகள்

நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது

தினத்தந்தி
|
11 Aug 2023 10:16 PM GMT

கூடங்குளம் பகுதியில் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

நெல்லை மாவட்டம் கூடங்குளம் போலீசார் கடந்த 2017-ம் ஆண்டு ஆவுடையாள்புரத்தை சேர்ந்த ராகுல் (வயது 23) என்பவரை அடிதடி வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர் கடந்த ஒரு மாதமாக நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இதனால் கோர்ட்டு அவருக்கு பிடியாணை பிறப்பித்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி பிடியாணையை நிறைவேற்றினர்.

மேலும் செய்திகள்