< Back
மாநில செய்திகள்
கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த பெயிண்டர் கைது
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த பெயிண்டர் கைது

தினத்தந்தி
|
19 April 2023 9:28 PM GMT

கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த பெயிண்டர் கைது செய்யப்பட்டார்.

அழகியபாண்டியபுரம்:

அழகியபாண்டியபுரத்தை அடுத்த கேசவன்புதூர் பகுதியை சேர்ந்தவர் ஜெஸ்டின் விஜய் (வயது 36). பெயிண்டரான இவர் மீது 4 வழக்குகள் உள்ளன.

கடந்த ஒரு வருடமாக விசாரணை தொடர்பாக கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். எனவே பூதப்பாண்டி போலீசார் அவரை தேடி வந்தனர். இந்தநிலையில் எட்டாமடை சந்திப்பு பகுதியில் நேற்று காலையில் அவர் நின்று கொண்டிருப்பதாக பூதப்பாண்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே இன்ஸ்பெக்டர் முத்துராஜ் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து ஜெஸ்டின் விஜயை மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்