< Back
மாநில செய்திகள்
தலைமறைவாக இருந்தவர் கைது
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்

தலைமறைவாக இருந்தவர் கைது

தினத்தந்தி
|
21 Dec 2022 7:17 PM GMT

விவசாயியை வெட்டிய வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டார்.

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த கன்னிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் லோகநாதன் (வயது 40). பொன்னம்பலம் கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாதுரை (55). இவர்கள் இருவருக்கும் இடையே நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி இரவு அண்ணாதுரை நிலத்திற்கு நீர் பாய்ச்ச சென்றபோது, அவருக்கும், அண்ணாதுரைக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது லோகநாதன் கத்தியால் அண்ணாதுரையின் கை மற்றும் கால்களில் வெட்டி உள்ளார். இதில் காயம் அடைந்த அண்ணாதுரை மாம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து வாழைப்பந்தல் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருந்த லோகநாதனை தேடி வந்தார். இந்த நிலையில் நேற்று மாம்பாக்கம் பஸ் நிலையம் அருகே நின்றிருந்த அவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்