< Back
மாநில செய்திகள்
உம்பளச்சேரி சமயபுரத்து மாரியம்மன் கோவில் ஆஞ்சநேயருக்கு அபிஷேகம்
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

உம்பளச்சேரி சமயபுரத்து மாரியம்மன் கோவில் ஆஞ்சநேயருக்கு அபிஷேகம்

தினத்தந்தி
|
22 March 2023 6:45 PM GMT

உம்பளச்சேரி சமயபுரத்து மாரியம்மன் கோவில் ஆஞ்சநேயருக்கு அபிஷேகம்

தலைஞாயிறு ஒன்றியம் உம்பளச்சேரியில் சமயபுரத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு தனி சன்னதி கொண்டு அருள்பாலித்து வரும் வைராக்கிய ஆஞ்சநேயருக்கு அமாவாசையையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், நெய், தேன், திரவியம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சாமிக்கு வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து மகாமண்டபத்தில் சிறப்பு யாகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்