< Back
மாநில செய்திகள்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்
திருட்டுத்தனமாக மது விற்ற வாலிபர் கைது
|7 Sep 2022 9:37 AM GMT
மறைமலைநகர் அருகே திருட்டுத்தனமாக மது விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே உள்ள கோகுலாபுரம் பகுதியில் திருட்டுத்தனமாக மது விற்று கொண்டிருந்த காஞ்சீபுரம் பகுதியை சேர்ந்த கலில் (வயது 33) என்பவரை கூடுவாஞ்சேரி மதுவிலக்கு போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த 20 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இது குறித்து கூடுவாஞ்சேரி மதுவிலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.