< Back
மாநில செய்திகள்
முந்திரி தோப்பில் தூக்கில் பிணமாக தொங்கிய வாலிபர்
அரியலூர்
மாநில செய்திகள்

முந்திரி தோப்பில் தூக்கில் பிணமாக தொங்கிய வாலிபர்

தினத்தந்தி
|
4 Nov 2022 7:06 PM GMT

முந்திரி தோப்பில் வாலிபர் தூக்கில் பிணமாக தொங்கினார்.

ஜெயங்கொண்டம்:

தூக்கில் பிணமாக தொங்கினார்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள மகிமைபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அலமேலு. இவரது முந்திரி தோப்பு அப்பகுதியில் உள்ளது. இந்நிலையில் நேற்று அந்த தோப்பில் உள்ள ஒரு மரத்தில் வாலிபர் ஒருவர், பேண்ட்டால் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கினார்.

அந்த வழியாக ஆடு, மாடு மேய்க்க சென்றவர்கள், அதைக்கண்டு அதிர்ச்சியடைந்து ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அந்த வாலிபரின் உடலை கைப்பற்றி, விசாரித்தனர்.

கொத்தனார்

அந்த வாலிபர் நிர்வாண நிலையில் பிணமாக தொங்கியது தெரியவந்தது. ஆனால் அவரை பற்றிய தகவல் உடனடியாக தெரியவில்லை. இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு ேபாலீசார் அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து வழக்குப்பதிந்து தொடர்ந்து விசாரணை நடத்தினர். இதில் தூக்கில் பிணமாக தொங்கியது, ஆண்டிமடம் அருகே மேலநெடுவாய் காலனித்தெருவை சேர்ந்த வீராசாமியின் மகன் சம்பத்(வயது 31) என்பது தெரியவந்தது. கொத்தனாராக வேலை பார்த்து வந்த சம்பத் வேலைக்காக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கோவைக்கு சென்றார்.

கொலை செய்து...

பின்னர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தனது குடும்பத்தினருடன் செல்போனில் பேசியுள்ளார். இந்நிலையில் நேற்று அவர் தூக்கில் பிணமாக தொங்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் அவரை யாரேனும் கொலை செய்து, உடலை தூக்கில் தொங்க விட்டார்களா? அல்லது அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் ேபாலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே சம்பத் இறந்த தகவல் அறிந்த அவரது உறவினர்கள் அதிர்ச்சியடைந்து, கதறி அழுதனர்.

முந்திரி தோப்பில் வாலிபர் தூக்கில் பிணமாக தொங்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்