< Back
மாநில செய்திகள்
காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை
தேனி
மாநில செய்திகள்

காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை

தினத்தந்தி
|
2 Sep 2023 9:00 PM GMT

கம்பத்தில் காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தேனி மாவட்டம் கம்பம் சுக்காங்கல்பட்டி தெருவை சேர்ந்த கிருஷ்ணராஜா (வயது 29). இவர் கடந்த ஆண்டு சேலத்தில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றினார். அப்போது கிருஷ்ணராஜாவுக்கும், சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள வெள்ளாண்டிவலசு பகுதியை சேர்ந்த ராஜா மகள் ஷாலினி (24) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து 2 பேரும் காதலித்து வந்தனர். பின்னர் அவர்கள் இருதரப்பு பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். அதன்பிறகு கிருஷ்ணராஜாவும், ஷாலினியும் கம்பத்தில் வசித்து வந்தனர்.

இந்தநிலையில் கணவன்-மனைவி இடையே கடந்த சில மாதங்களாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில், மனமுடைந்த ஷாலினி வீட்டின் கதவை உள்புறமாக பூட்டிக்கொண்டார். இதனால் சந்தேகமடைந்த கிருஷ்ணராஜா, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து திறந்து பார்த்தார். அப்போது உள்ளே ஷாலினி தூக்கில் தொங்கி கொண்டிருந்தார். உடனே கிருஷ்ணராஜா தனது மனைவியை மீட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஷாலினி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து ஷாலினியின் தந்தை ராஜா, கம்பம் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஷாலினிக்கு திருமணமாகி 8 மாதங்கள் மட்டுமே ஆவதால் உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. பால்பாண்டியனும் விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்