< Back
மாநில செய்திகள்
கடம்பத்தூரில் குடும்பத் தகராறு காரணமாக இளம்பெண் தீக்குளித்து தற்கொலை
திருவள்ளூர்
மாநில செய்திகள்

கடம்பத்தூரில் குடும்பத் தகராறு காரணமாக இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

தினத்தந்தி
|
26 March 2023 9:03 AM GMT

கடம்பத்தூரில் குடும்பத் தகராறு காரணமாக இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ராஜீவ் காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி அமுதா (வயது 29). இவர்களுக்கு 4 பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 16-ந் தேதியன்று அமுதா குடும்பத்தகராறு காரணமாக தன் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டாக கூறப்படுகிறது. இதை கண்ட அவரது வீட்டில் உள்ளவர்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு சிகிச்சை அளித்த டாக்டா்கள் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அமுதா நேற்று முன்தினம் சிகிச்சை பலன் இல்லாமல் பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து கடம்பத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். அவர் குடும்பத் தகராறு காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்