< Back
மாநில செய்திகள்
வணிக வளாக சிலாப் இடிந்து விழுந்து தொழிலாளி பலி
திருநெல்வேலி
மாநில செய்திகள்

வணிக வளாக சிலாப் இடிந்து விழுந்து தொழிலாளி பலி

தினத்தந்தி
|
13 Aug 2023 12:19 AM GMT

ஏர்வாடியில் புதிதாக கட்டப்பட்ட வணிக வளாக சிலாப் இடிந்து விழுந்து தொழிலாளி பலியானார்.

ஏர்வாடி:

காவல்கிணறு அருகே உள்ள அழகியநம்பியாபுரத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் சுந்தர் (வயது 31). கட்டிட தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் ஏர்வாடி தெற்கு பிரதான சாலையில் புதிய வணிக வளாகம் கட்டுமான பணியில் ஈடுபட்டார். அங்கு புதிதாக கட்டப்பட்ட சிலாப்பின் பலகையை அகற்றிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென சிலாப் இடிந்து சுந்தர் மீது விழுந்தது. இதில் அவர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

தகவல் அறிந்த ஏர்வாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மராஜ் மற்றும் போலீசார் அங்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்த சுந்தர் திருமணம் ஆகாதவர். அவருக்கு இசக்கியம்மாள் என்ற தாயாரும், 3 சகோதரிகளும் உள்ளனர். தந்தை ஆறுமுகம் ஏற்கனவே இறந்து விட்டதால் சுந்தரின் வருமானத்தில் தான் அவரது குடும்பம் பிழைப்பு நடத்தி வந்தது. தற்போது அவரும் இறந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்