< Back
மாநில செய்திகள்
ரெயிலில் பயணம் செய்த பெண் திடீர் சாவு
கரூர்
மாநில செய்திகள்

ரெயிலில் பயணம் செய்த பெண் திடீர் சாவு

தினத்தந்தி
|
21 Jun 2023 6:38 PM GMT

ரெயிலில் பயணம் செய்த பெண் திடீரென இறந்தார்.

ஈரோட்டில் இருந்து திருச்சி வரை நேற்று காலை பயணிகள் ரெயில் வந்தது. இந்த ரெயிலில் ஈரோட்டில் இருந்து வந்த அடையாளம் தெரியாத சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண் மாயனூர் ரெயில் நிலையம் அருகே வந்தபோது உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக தகவல் கிடைத்தது. பின்னர் மாயனூர் ரெயில் நிலையத்தில் அந்த பெண்ணை பரிசோதனை செய்தபோது அவர் இறந்துவிட்டார். இதனையடுத்து கரூர் ரெயில் நிலைய போலீசார் அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இறந்தவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்