< Back
மாநில செய்திகள்
பள்ளத்தில் கவிழ்ந்த லாரி; டிரைவர் உயிர் தப்பினார்
திருச்சி
மாநில செய்திகள்

பள்ளத்தில் கவிழ்ந்த லாரி; டிரைவர் உயிர் தப்பினார்

தினத்தந்தி
|
1 Jun 2023 8:37 PM GMT

பள்ளத்தில் லாரி கவிழ்ந்த சம்பவத்தில் டிரைவர் உயிர் தப்பினார்.

கொள்ளிடம் டோல்கேட்:

சேலத்தில் இருந்து திருச்சிக்கு பிஸ்கட் பாக்கெட்டுகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று புறப்பட்டு வந்தது. அந்த லாரியை சேலத்தை சேர்ந்த வேலு (வயது 41) ஓட்டினார். திருச்சி மாவட்டம், வாத்தலை அருகே காத்தான் கோவில் என்ற இடத்தில் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரி டிரைவர் வேலு சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து வாத்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்