< Back
மாநில செய்திகள்
கிணற்றில் தவறி விழுந்த வாலிபர் சாவு
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

கிணற்றில் தவறி விழுந்த வாலிபர் சாவு

தினத்தந்தி
|
19 Sep 2023 6:45 PM GMT

உளுந்தூர்பேட்டை அருகே கிணற்றில் தவறி விழுந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

உளுந்தூர்பேட்டை

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பரிந்தல் கிராமத்தை சேர்ந்தவர் செல்லமுத்து மகன் அரவிந்த்(வயது 18). வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட இவர் நேற்று காலை அருகில் உள்ள கிணற்றுக்கு குளிக்க சென்றவர் நீண்டநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் தேடியபோது அங்குள்ள கிணற்றின் கரையில் அரவிந்தின் உடைகள் மட்டும் கிடைந்தன. ஆனால் அவரை காணாததால் வலிப்பு நோயால் தவறி கிணற்றில் மூழ்கி இருக்கலாம் என சந்கேம் அடைந்த அவர்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் தியாகதுருகம் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து கிணற்றில் இறங்கி தேடினர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பிறகு அரவிந்தை கிணற்றிலிருந்து பிணமாக மீட்டனர். தகவல் அறிந்து வந்த எலவனாசூர்கோட்டை போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
மேலும் செய்திகள்