< Back
மாநில செய்திகள்
சாலையோரம் இறந்து கிடந்த வாலிபர்
கரூர்
மாநில செய்திகள்

சாலையோரம் இறந்து கிடந்த வாலிபர்

தினத்தந்தி
|
8 July 2023 6:27 PM GMT

சாலையோரம் இறந்து கிடந்த வாலிபர் யார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர்-மதுரை பைபாஸ் சாலையில் உள்ள மண்டி கடை வணிக வளாகம் அருகே சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். இதுகுறித்து ஆண்டாங்கோவில் கிராம நிர்வாக அலுவலர் சண்முகம் கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்துல்லா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, அந்த வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து அந்த வாலிபர் எப்படி இறந்தார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என்பன உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்