< Back
மாநில செய்திகள்
குளத்தில் மீன்பிடித்த போது நீரில் மூழ்கி வாலிபர் சாவு
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

குளத்தில் மீன்பிடித்த போது நீரில் மூழ்கி வாலிபர் சாவு

தினத்தந்தி
|
29 May 2023 6:47 PM GMT

குளத்தில் மீன்பிடித்த போது நீரில் மூழ்கி வாலிபர் இறந்தார்.

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் கோவில்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 30). இவர் சம்பவத்தன்று அரசு ஐ.டி.ஐ. பின்புறம் உள்ள குளத்தில் மீன்பிடிக்க சென்றிருந்தார். அப்போது குளத்தில் தவறி விழுந்ததில் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இது குறித்து திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்