< Back
மாநில செய்திகள்
ரெயில் மோதி வாலிபர் சாவு
கடலூர்
மாநில செய்திகள்

ரெயில் மோதி வாலிபர் சாவு

தினத்தந்தி
|
13 July 2023 6:45 PM GMT

நெல்லிக்குப்பம் அருகே ரெயில் மோதி வாலிபர் இறந்தார்.

நெல்லிக்குப்பம்,

நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கம் பி.என். பாளையத்தை சேர்ந்தவர் தணிகைராஜ் (வயது 26). சம்பவத்தன்று இவர் அதே பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சென்னையில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் தணிகைராஜ் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பாிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த கடலூர் முதுநகர் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தணிகைராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்