< Back
மாநில செய்திகள்
மரத்தில் இருந்து தவறி விழுந்து வாலிபர் சாவு
விருதுநகர்
மாநில செய்திகள்

மரத்தில் இருந்து தவறி விழுந்து வாலிபர் சாவு

தினத்தந்தி
|
23 Sep 2023 6:45 PM GMT

மரத்தில் இருந்து தவறி விழுந்து வாலிபர் சாவு


விருதுநகர் கே.கே.எஸ்.எஸ்.என். நகரை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 48). இவரது மகன் சஞ்சய்(24). இவர் விருதுநகரில் உள்ள சினிமா தியேட்டரில் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார். நேற்று மதியம் சஞ்சய், விருதுநகர் கே.ஆர். கார்டனில் உள்ள கனகராஜ் என்பவர் வீட்டில் குடிநீர் தொட்டியை சுத்தம் செய்யச் சென்றார். பின்னர் அங்கிருந்த மரக்கிளையை வெட்ட மரத்தில் ஏறி கிளையை வெட்டிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மரத்தில் இருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட சஞ்சய் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இது பற்றி அவரது தந்தை செந்தில்குமார் கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்