< Back
மாநில செய்திகள்
ரெயிலில் அடிபட்டு வாலிபர் சாவு
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

ரெயிலில் அடிபட்டு வாலிபர் சாவு

தினத்தந்தி
|
28 Aug 2023 6:45 PM GMT

ரெயிலில் அடிபட்டு வாலிபர் சாவு

ராமேசுவரம்

மண்டபத்திலிருந்து நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு கர்நாடகா மாநிலம் ஹூப்ளி பகுதிக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்று புறப்பட்டு சென்றுள்ளது. இந்த ரெயிலானது ராமநாதபுரம் அருகே லாந்தை ரெயில்வே கேட் பகுதியில் சென்றபோது அந்த ரெயிலில் ஒருவர் அடிபட்டு இறந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ராமேசுவரம் ரெயில்வே போலீசார் ரெயிலில் அடிபட்டு இறந்தவர் யார் என விசாரணை செய்தனர். அதில் இறந்தவருக்கு 25 வயது இருக்கும் என்பது தெரியவந்தது.

மேலும் அவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. இது குறித்து ராமேசுவரம் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்