< Back
மாநில செய்திகள்
உறவுக்கார பெண் திருமணத்துக்கு மறுத்ததால் வாலிபர் தற்கொலை
சென்னை
மாநில செய்திகள்

உறவுக்கார பெண் திருமணத்துக்கு மறுத்ததால் வாலிபர் தற்கொலை

தினத்தந்தி
|
19 Aug 2023 8:24 AM GMT

குடிப்பழக்கம் இருப்பதாக கூறி உறவுக்கார பெண் திருமணத்துக்கு மறுத்ததால் வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.

மணலி,

மணலி பி.ஆர்.கே. சர்மா தெருவை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 28), கூலி தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவருக்கு உறவுக்கார பெண்ணுடன் திருமணம் நடப்பதாக இருந்தது. ஆனால் ராஜேசுக்கு குடிப்பழக்கம் உள்ளதால் அவரை திருமணம் செய்ய அந்த பெண் மறுத்துவிட்டார்.

இதனால் மேலும் குடிப்பழக்கத்துக்கு அடிமையான அவரை போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்தனர். அங்கிருந்து கடந்த வாரம் வீட்டுக்கு வந்த ராஜேஷ் மீண்டும் குடிக்க தொடங்கினார். இதனை அவருடைய தாயார் கண்டித்தார்.

இதனால் விரக்தி அடைந்த ராஜேஷ், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி மணலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்