< Back
மாநில செய்திகள்
சமூக சேவகர், தொண்டு நிறுவனத்திற்கான விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்

சமூக சேவகர், தொண்டு நிறுவனத்திற்கான விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

தினத்தந்தி
|
1 Jun 2023 6:12 PM GMT

சமூக சேவகர், தொண்டு நிறுவனத்திற்கான விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

தமிழக அரசால் பெண்களின் முன்னேற்றத்திற்கு, சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனத்திற்கான விருதுகள், சுதந்திர தின விழாவில் தமிழக முதல்-அமைச்சரால் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. சிறந்த சமூக சேவகருக்கு 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்று வழங்கப்படுகின்றன. சிறந்த நிறுவனத்திற்கு ரூ.50 ஆயிரம் ரொக்கப் பரிசுடன், 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்று வழங்கப்படுகிறது. 2023-ம் ஆண்டிற்கான பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனத்திற்கான விருதுகள் வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விருதுக்கான விண்ணப்ப விவரங்கள் அனைத்தும் தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் (https://awards.tn.gov.in) ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க 10-ந் தேதி கடைசி நாள் ஆகும். விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்த பின், பயோடேட்டா, சுயசரிதை, பாஸ்போட் அளவு போட்டோ-2, சிறந்த சமூக சேவைக்காக இதுவரை பெற்ற விருதுகளின் விவரங்கள் மற்றும் சான்றுகளுடன் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், 4- வது தளம் சி பிளாக்கிலுள்ள மாவட்ட சமூகநல அலுவலகத்தில் 13-ந் தேதிக்குள் நேரில் சமர்ப்பிக்கலாம்.

இந்த தகவலை கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்