< Back
மாநில செய்திகள்
தொழிலாளி வீட்டுக்குள் புகுந்த பாம்பு
திண்டுக்கல்
மாநில செய்திகள்

தொழிலாளி வீட்டுக்குள் புகுந்த பாம்பு

தினத்தந்தி
|
21 Sep 2023 8:00 PM GMT

நத்தத்தில் தொழிலாளி வீட்டுக்குள் பாம்பு ஒன்று புகுந்தது.

நத்தம் தர்பார் நகரை சேர்ந்தவர் ராஜாமுகமது (வயது 34). தையல் தொழிலாளி. நேற்று இவரது வீட்டிற்குள் பாம்பு ஒன்று புகுந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் நத்தம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் லெட்சுமணன் தலைமையில் படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் வீட்டுக்குள் பதுங்கி இருந்த சுமார் 4 அடி நீளமுள்ள சாரைப்பாம்பை பிடித்தனர். பின்னர் பிடிபட்ட பாம்பை நத்தம் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அதைத்தொடர்ந்து பாம்பு வனப்பகுதிக்குள் விடப்பட்டது.

Related Tags :
மேலும் செய்திகள்