< Back
மாநில செய்திகள்
இளம்பெண்ணுக்கு அரிவாள் வெட்டு; அண்ணன் கைது
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

இளம்பெண்ணுக்கு அரிவாள் வெட்டு; அண்ணன் கைது

தினத்தந்தி
|
27 Jun 2023 6:45 PM GMT

திருவாடானையில் இளம்பெண்ணை அரிவாளால் வெட்டி அவரது அண்ணனை போலீசார் கைது செய்தனர்.

தொண்டி,

திருவாடானை எல்.கே.நகர் பகுதியில் வசிக்கும் சுந்தரலிங்கத்தின் மனைவி சத்யா (வயது 19). இவர் கணவரைவிட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவரிடம் இவரது அண்ணன் வீரக்கண்ணன் மதுகுடிப்பதற்கு பணம் கேட்டுள்ளார். அதற்கு சத்யா பணம் இல்லை என கூறினார். இதனால் ஆத்திரமடைந்த அவர் அவதூறாக பேசியதோடு அரிவாளை எடுத்து சத்யாவை வெட்டினார். இதில் பலத்த காயம் அடைந்த சத்யா திருவாடானை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் அளித்த புகாரின் பேரில் திருவாடானை போலீசார் வீரக்கண்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்