< Back
மாநில செய்திகள்
வாலிபருக்கு அரிவாள் வெட்டு
மதுரை
மாநில செய்திகள்

வாலிபருக்கு அரிவாள் வெட்டு

தினத்தந்தி
|
28 Oct 2022 7:50 PM GMT

மதுரையில் முன்விரோதத்தில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

மதுரை திருப்பாலை, ஜி.ஆர்.நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 37). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் சொந்த ஊரான மதுரைக்கு வந்தார். சம்பவத்தன்று அவர் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்று விட்டு வீடு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது பொன்விழா நகர் ஜூப்ளி டவுன் அருகே வந்த போது 2 பேர் அவரை வழிமறித்து தகராறு செய்தனர். பின்னர் அவர்கள் செந்தில்குமாரை கீழே தள்ளி, சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்று விட்டனர். படுகாயம் அடைந்த செந்தில்குமாரை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் சம்பவம் குறித்த புகாரின் பேரில் திருப்பாலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் செந்தில்குமாரும், அவரது சகோதரர்கள் மற்றும் நண்பர்களுக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் யாரும் அவரை தாக்கினார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
மேலும் செய்திகள்