< Back
மாநில செய்திகள்
வாலிபருக்கு அரிவாள் வெட்டு
திருநெல்வேலி
மாநில செய்திகள்

வாலிபருக்கு அரிவாள் வெட்டு

தினத்தந்தி
|
1 Oct 2023 9:26 PM GMT

களக்காடு அருகே வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

களக்காடு:

களக்காடு அருகே கீழக்காடுவெட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் சுப்பையா மகன் செல்வம் (வயது 25). மும்பையில் இட்லி வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கீழக்காடுவெட்டி அம்மன் கோவில் கொடை விழாவில் சப்பரம் தூக்குவதில் செல்வத்திற்கும், அதே ஊரைச் சேர்ந்த இசக்கி மகன் பலவேசத்திற்கும் (35) தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் செல்வம் ஊருக்கு வந்திருந்தார். சம்பவத்தன்று அங்குள்ள வீட்டு திண்ணையில் படுத்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பலவேசம், செல்வத்தை அரிவாளால் வெட்டினார். இதில் படுகாயமடைந்த செல்வம் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றிய புகாரின் பேரில் களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து பலவேசத்தை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்