< Back
மாநில செய்திகள்
மதுரை
மாநில செய்திகள்
சட்டக்கல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டு
|9 Aug 2022 8:59 PM GMT
மதுரையில் சட்டக்கல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
மதுரை கருப்பாயூரணி பகுதியை சேர்ந்தவர் பரத்வஜன் (வயது 23). இவர் சட்டக்கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும் காளவாசலை சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் நடந்து குழந்தை உள்ளது. இந்த நிலையில் மனைவி கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விட்டார். எனவே பரத்வஜன் வீட்டில் தனியாக இருந்து வருகிறார். சம்பவத்தன்று இரவு அவர் ஆண்டார் கொட்டாரம் மலைப்பகுதிக்கு வந்தார். அப்போது அங்கு வந்த 2 பேர் அவரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி விட்டனர். அதில் படுகாயம் அடைந்த அவரை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது குறித்த புகாரின் பேரில் கருப்பாயூரணி போலீசார் சட்டக்கல்லூரி மாணவரை வெட்டிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.