< Back
தமிழக செய்திகள்
ஆட்டோவில் பிணமாக கிடந்த தூய்மை பணியாளர்
திருச்சி
தமிழக செய்திகள்

ஆட்டோவில் பிணமாக கிடந்த தூய்மை பணியாளர்

தினத்தந்தி
|
8 Aug 2022 1:04 AM IST

தூய்மை பணியாளர் ஆட்டோவில் பிணமாக கிடந்தார்.

திருச்சி கல்லுக்குழி செங்குளம் காலனி பகுதியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன்(வயது 38). இவர் திருச்சி மாநகராட்சி 18-வது வார்டில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று தாராநல்லூர் பகுதியில் வேலை செய்துவிட்டு, அலங்கநாதபுரம் ரேஷன் கடை அருகில் நின்ற ஒரு ஆட்டோவின் பின் சீட்டில் படுத்திருந்தார். இந்நிலையில் நீண்ட நேரம் ஆகியும் அவர் எழுந்திருக்கவில்லை. இது பற்றி அக்கம் பக்கத்தினர் காந்தி மார்க்கெட் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தமிழ்ச்செல்வனை பார்த்த போது அவர் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து காந்தி மார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்