< Back
மாநில செய்திகள்
இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்தவர் சாவு
விருதுநகர்
மாநில செய்திகள்

இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்தவர் சாவு

தினத்தந்தி
|
18 Sep 2023 7:11 PM GMT

இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்தவர் பரிதாபமாக இறந்தார்.

ராஜபாளையம்,

ராஜபாளையம் அருகே உள்ள முகவூர் முத்துச்சாமிபுரம் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 47). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு ராஜபாளையத்திலிருந்து சேத்தூர் சோலைசேரி பகுதி வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டு இருந்தார். அப்போது சாலை வளைவில் இரு சக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்தார். உடனே அவரை மீட்டு ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து சேத்தூர் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்