< Back
மாநில செய்திகள்
அளவுக்கு அதிகமாக மது குடித்தவர் சாவு
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

அளவுக்கு அதிகமாக மது குடித்தவர் சாவு

தினத்தந்தி
|
15 Oct 2023 6:24 PM GMT

அளவுக்கு அதிகமாக மது குடித்தவர் இறந்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் காரையூரை சேர்ந்தவர் ஜெகதீசன் (வயது 35). இவர் மதுபோதைக்கு அடிமையானவர் எனக்கூறப்படுகிறது. இந்த நிலையில் மச்சுவாடி அருகே அளவுக்கு அதிகமாக மது குடித்த நிலையில் ஜெகதீசன் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கணேஷ்நகர் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்