< Back
மாநில செய்திகள்
பணமோசடியில் ஈடுபட்டவர் கைது
அரியலூர்
மாநில செய்திகள்

பணமோசடியில் ஈடுபட்டவர் கைது

தினத்தந்தி
|
26 Aug 2023 7:25 PM GMT

பணமோசடியில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார்.

தாமரைக்குளம்:

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே உள்ள பட்டணங்குறிச்சியை சேர்ந்த பரமசிவத்தின் மகன் மணிவேல். இவர் செந்துறை மேலப்பட்டி சிறுகளத்தூரை சேர்ந்த இளவரசனிடம்(வயது 53) அவரது தொழிலை அபிவிருத்தி செய்ய வங்கிக்கடன் வாங்கி தருவதாக கூறி, கடந்த 9.1.2022 அன்று ரூ.80 ஆயிரம் பெற்றுள்ளார். இளவரசன், பார்வதி, பிரியா, ஆண்டாள், ராமச்சந்திரன், ராஜா உள்ளிட்ட 12 பேரிடம் வீட்டுக்கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.40 ஆயிரம் முதல் ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் வரை என மொத்தம் ரூ.10 லட்சத்து 70 ஆயிரம் பெற்றுள்ளார். ஆனால் அவர் கூறியபடி கடன் பெற்றுத்தரவில்லை என்று தெரிகிறது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த இளவரசன் இது குறித்து அரியலூர் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை தேடி வந்தனர். இந்நிலையில் அவர் ஈரோடு மாவட்டத்தில் இருப்பதாக தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார், மணிவேலை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அவரை செந்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்